has gloss | tam: கோவலன், தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் முக்கியமான கதைமாந்தன் ஆவார். இவர் காவிரிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த மாசாத்துவன் என்னும் வணிகனின் மகன் ஆவார். இவர் மற்றொரு வணிகரின் மகளான கண்ணகியை மணந்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சிலகாலத்திற்குப் பின் கோவலனுக்கு மாதவி என்னும் நாட்டியக்காரியின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். ஆனால் சிறிது காலத்தில் அவன் செல்வம் அனைத்தும் கரைந்து போனது. பின்னர் மனம் திருந்திய கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வந்தான். அவர்களிடம் ஓரிணை சிலம்புகளைத் தவிர வேறேதும் இல்லை. |